முல்லைத்தீவில் கடற்தொழில் நீரியல் வள திணக்களம் முற்றுகை!
முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்துக்குள் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் அத்துமீறி நுழைந்தமையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது . சட்டவிரோத மீன்பிடியை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மீனவர்கள் அத்துமீறி கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்துக்குள் தற்போது புகுந்துள்ளனர். காவல் துறை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிவருகின்ற நிலையில், மேலதிக காவல் துறையினர் அருகிலுள்ள காவல் துறை நிலையங்களில் இருந்து வரவழைத்து கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed